விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் |

சிம்பொனி இசையமைத்து சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய பயோபிக் படத்தின் துவக்க விழா சென்னையில் கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்றது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க படத்தின் அறிவிப்பை சில போஸ்டர்களுடன் வெளியிட்டனர். துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனால், அதன்பின் படம் பற்றிய எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் தான் இப்படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறார் என்றும் சொன்னார்கள். கடந்த வருடக் கடைசியில் இப்படம் 'டிராப்' ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தை இணைந்து தயாரிப்பதாக இருந்த ஒரு நிறுவனம் பட்ஜெட்டைக் காரணம் காட்டி விலகியதாகவும் சொன்னார்கள்.
இந்நிலையில் இப்படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி.யான ரவிக்குமார் டில்லியில் தனுஷை சந்தித்தது குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “டில்லி விமானத்தில் பயணித்தபோது அதே விமானத்தில் பயணித்த நடிகர் தனுஷ் அவர்களோடு தலைவரும் நானும் உரையாடினோம். இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் எந்த நிலையில் உள்ளது எனக் கேட்டபோது இன்னும் அந்த ப்ராஜெக்ட் இறுதி செய்யப்படவில்லை என்றார். இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக வந்ததாகக் கூறினார். இந்தியிலும் பாடுவீர்களா எனக் கேட்டேன். ஆமாம் என்றார். அவர் தமிழில் பாடியது நன்றாக இருந்தது.
இந்தப் படங்கள் டில்லி விமான நிலையத்தில் கடந்த திங்கள் கிழமை எடுத்தவை. பார்லிமென்ட் பணிகளின் நெருக்கடியில் இவற்றை பகிர மறந்துவிட்டேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் 'இளையராஜா' படம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது என்று தனுஷ் சொன்ன தகவல் வெளியாகி உள்ளது. படம் அறிவித்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் இன்னும் ஆரம்பமாகாமல் இருப்பது இளையராஜாவின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.