ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தென்னிந்தியாவின் சார்லி சாப்ளின் என்று போற்றப்பட்டவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், சிவாஜி கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு நிகரான நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்தவர். முதன் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய காமெடி நடிகர். சந்திரபாபு நடிகராக மட்டுமல்ல பாடகராகவும் பெரிய வெற்றி பெற்றவர். அவரது தனித்துவமான வேடிக்கை குரல், ரசிகர்களை கட்டிப்போட்டது.
அவர் பாடிய இரண்டு முக்கியமான பாடல்கள் 'நான் ஒரு முட்டாளுங்க, என நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...' மற்றும் 'வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை, புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. இந்த பாடல் போலவே அவரது கடைசி காலம் அமைந்தது.
வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து வெற்றி பெற்ற சந்திரபாபுவால் மதுவில் இருந்து வெளியேற முடியவில்லை. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் நடித்தார். ஒரே நாளில் நான்கு படங்களில் நடித்தார். ஆனால் அவர் சம்பாதித்த பணம் மதுவாலும், நண்பர்களின் துரோகத்தாலும் அவரை அறியாமலேயே கரைந்து போனது.
ஒருகட்டத்தில் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். சம்பாதித்து இவர் கட்டிய பங்களாவைப் பற்றி கதைகதையாகச் சொல்வார்கள். வீட்டின் முதல் மாடியில் கார் பார்க்கிங், பின் பகுதியில் நீச்சல் குளம் என எம்.ஜி.ஆரை விட சொகுசாக வாழ்ந்தவர். இவரது திருமண வாழ்க்கையும் திடுக்கிடும் திருப்பங்களை கொண்டதாக அமைந்தது.
தனது இறுதி நாட்களில் வறுமைக்கு உள்ளாகி, மருத்துவ செலவுக்குகூட கையில் பணம் இல்லாமல் சென்னை அரசு ஆஸ்பத்திரி பொது வார்டில் சிகிச்சை பெற்றார். கடைசியில் வறுமையாலேயே இறந்தும் போனார்.
இன்று அவரது 51வது நினைவு நாள்.