பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் |
தெலுங்கு தேசம் கட்சியையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அவரது மகன் நரா லோகேஷ், மருமகள் பிராமினி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரையும் விமர்சிக்கும் வகையில், இயக்குநர் ராம்கோபால் வர்மா சமூகவலைதளத்தில் கடந்த வருடம் ஒரு பதிவிட்டிருந்தார். இதை எதிர்த்து தற்போது அவர் மீது தெலுங்கு தேச கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் தற்போது ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தன்னுடைய 'வியூகம்' படத்துக்கான புரமோஷனின்போது, சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரின் ஆளுமைகளை இழிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம் கொடுத்த புகார் அடிப்படையில், பரகசம் மாவட்டத்தில் உள்ள மடிப்பாடு காவல்நிலையத்தில் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.