சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? |
தமிழ் சினிமாவில் 60, 70 காலகட்டத்தில் நடிகர், காமெடியன், இயக்குனர், பாடகர் என பல பரிமாணங்களில் கலக்கியவர் சந்திரபாபு. அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி எந்த அளவிற்கு உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார்களோ அவர்களுக்கு நிகரான நடிகர் சந்திரபாபு என்றால் மிகையாகாது. கிட்டத்தட்ட 76 படங்களில் நடித்துள்ளார்.
இவர் உச்சத்தில் இருந்த நேரத்தில் க்ரீன் ரோட்டில் 20 ஏக்கரில் வீடு ஒன்றைக் கட்டமைத்து வந்தார். அப்போதே அந்த வீட்டில் நேரடியாக முதல் தளத்திற்கு கார் பார்க் செய்யும் வசதியுடன் கட்டமைத்தார்.
அதன் பின்னர் எம்.ஜி. ஆரை வைத்து 'மாடி வீட்டு ஏழை' எனும் படத்தை சந்திரபாபு இயக்கவிருந்தார். அந்த பட படப்பிடிப்பு பாதியில் கைவிடப்பட்டது. இதனால் அவர் பண ரீதியாக மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டு 1974ம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க நடிகர் தனுஷ் முடிவு செய்துள்ளார். இதில் சந்திரபாபுவாக தனுஷ் நடிக்கவுள்ளார். இதற்காக சந்திரபாபுவின் குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தனுஷ் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜா ஆக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.