பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | 'மார்கோ' படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பகூடாது : மத்திய தணிக்கை வாரியத்துக்கு கேரள அதிகாரி கடிதம் | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி | லண்டனில் சிம்பொனி இசை ; இது என் பெருமை அல்ல... நாட்டின் பெருமை : இளையராஜா | அஜித், கமல்ஹாசன் வழியில் நயன்தார : அடுத்தது யார் ? | படக்குழு மட்டும் கொண்டாடிய 'டிராகன்' சக்சஸ் பார்ட்டி | இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு அனஸ்வரா ராஜன் பதிலடி ; நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார் |
கடந்த 2019ல் நடிகர் பிரித்விராஜ் முதல்முறையாக இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கினார். அரசியல் கேங்ஸ்டர் பின்னணியில் உருவான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. லூசிபர் முதல் பாகத்தில் நடைபெற்ற கதையின் தொடர்ச்சியாக அதில் இடம்பெற்று இருந்த பல முக்கிய கதாபாத்திரங்களும் இதிலும் தொடரும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் லூசிபர் படம் பார்த்த பலரும் அதன் கதை என்னவென்று தற்போது மறந்திருப்பார்களோ என்கிற எண்ணத்தில் எம்புரான் பார்க்க வருவதற்கு வசதியாக அதற்கு முன்பே லூசிபர் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். அந்த வகையில் எம்புரான் பட ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக அதாவது மார்ச் 20ம் தேதி லூசிபர் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
எப்படியும் எம்புரான் படத்திற்காக மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் செலவு செய்து படம் பார்க்க வருவார்கள் என்கிற நிலையில் இப்போது லூசிபர் படத்தையும் திரையிட்டால் அதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஒரு முறை கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும். இது தேவையில்லாமல் அவர்கள் மீது சுமை ஏற்றுவது போலத்தான் என பல நடுநிலை ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.