ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
நாளை மார்ச் 7ம் தேதி 9 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படம் பின் வாங்கிவிட்டது. போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என நேற்றே அறிவித்துவிட்டார்கள். புது வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அதனால், நாளை 8 படங்கள் வெளியாக உள்ளது. “அம்பி, படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி'' ஆகிய படங்கள்தான் அவை. 'ஜென்டில்வுமன், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி' படங்களின் பத்திரிகையாளர் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன.
அவற்றில் 'எமகாதகி' படத்தைப் பலரும் பாராட்டியுள்ளார்கள். அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 1997ம் ஆண்டு வெளிவந்த 'கடவுள்' படத்தில் அறிமுகமான வெங்கட ராகுல் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இறந்த பிறகும் ஒரு பெண் செய்யும் போராட்டம்தான் இப்படத்தின் கதை. பத்திரிகையாளர்கள் பாராட்டியதை படக்குழு சரியாகக் கொண்டு போய் மக்களிடம் சேர்த்தால் இப்படம் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.