வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் | தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு |
நடிகர் ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள 'அஸ்திரம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஷாம் கூறுகையில் "நல்ல இயக்குனருடன் நல்ல கதையில் நடிச்சிருக்கேன்னு ஒரு திருப்தி இருக்கு. 'அஸ்திரம்' படம் எனது திரை பயணத்தில் அடுத்தக்கட்டமாக இருக்குமானு மார்ச் 7ம் தேதி தெரிய வரும். கெரியர் தொடங்கும்போது நடிகராகணும்னு வந்தேன். அந்த காலகட்டத்தில் இயக்குனர் ஜீவா சார் '12பி' படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். அப்போது எனக்கு வேற எந்த அனுபவமும் இல்லை. சில தவறுகள் நடந்தது அதை எதிர்மறையாக எடுத்துக்கிட்டு மனச்சோர்வுக்குள்ள போகிற நபர் நான் கிடையாது.
'வாரிசு' படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் நான் நடித்து வருகிறேன் . '12பி' படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நான்கு படங்களை நான் ஒப்பந்தம் செய்து நடித்து வந்தேன். அந்தத் தவறை இப்போது பண்ணக்கூடாது என நான் தெளிவாக இருக்கேன். சினிமாவின் தொடக்கத்தில் எனக்கு பெரிய பயணம் அமையவில்லை. 3 வருடம் முயற்சி பண்ணினேன். அதன் பிறகு எனக்கு சினிமாவுல வாய்ப்புக் கிடைச்சது. இன்னைக்கு இருக்கிற பலர் சினிமா பயணத்தோட தொடக்கத்துல பல கடினங்களை சந்தித்துள்ளனர். எனது கெரியரின் ஆரம்பத்தில் எனக்கு சரியான வழிகாட்டி இல்லை. அந்த சமயத்தில் எனக்கு எந்த பின்புலமும் இல்லை இதை நான் குறையாக சொல்லமுடியாது. அதெல்லாம் தெரிஞ்சு தான் நான் சினிமாவுக்கு வந்தேன்" என தெரிவித்துள்ளார்.