ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நடிகர் பரத் ஹீரோ தாண்டி பிற நடிகர்கள் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமுத்திரகனி உடன் வீர வணக்கம் படத்தில் நடிப்பவர் அடுத்து சசிகுமார் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். குடும்ப உறவுகளின் வலிமையை உணர்த்தும் விதமாக உருவாகும் இப்படத்தில் மேகா செட்டி, மாளவிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்க உள்ளனர். பெயரிடப்படாத இப்படத்தை குரு என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10ம் தேதி அன்று பட்டுக்கோட்டையில் துவங்குகிறது. இதன் படப்பிடிப்பு பட்டுகோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரணியம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.