பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்த படத்தால் பள்ளி குழந்தைகள் கெட்டு போகின்றனர் என ஆசிரியை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மாணவர்களின் நடத்தை பற்றி தெலுங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள், மாநில கல்வி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற ஒரு ஆசிரியை கூறும்போது, ‛‛அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தை பார்த்த பின் பள்ளிக் குழந்தைகள் கெட்டு போய் உள்ளனர். மாணவர்களும் அந்த படத்தில் வருவதுபோன்று மோசமான ஹேர்ஸ்டைல் மற்றும் ஆபாசமாக பேசுகின்றனர்.
அரசு பள்ளி மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் இதே நிலை தான் உள்ளது. பெற்றோர்களும் இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவது கிடையாது. இந்த படத்திற்கு எதன் அடிப்படையில் சென்சார் சான்று கொடுத்தார்கள் என தெரியவில்லை. இதையல்லாம் பார்க்கையில் ஒரு ஆசிரியையாக நான் தோற்றது போன்று உள்ளது''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.