கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் பராசக்தி படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிப்., 17ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி பராசக்தி படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன், யூனிட்டுக்கு தனது கையால் பிரியாணியும் பரிமாறி உள்ளார். அது குறித்த வீடியோவை இயக்குனர் சுதா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இயக்குனர் சுதா, அதர்வா உள்ளிட்ட பலருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி பரிமாறும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது.