50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' |
சமீப வருடங்களாக நடிகர் மம்முட்டி, நடிப்பையும் தாண்டி மம்முட்டி கம்பெனி என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார், இவரது தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகள் மற்றும் மம்முட்டிக்கான வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டே தயாராகி வருகின்றன, ‛நண்பகல் நேரத்து மயக்கம், பிரம்மயுகம், காதல் ; தி கோர்' என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் இளம் அறிமுக இயக்குனரும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‛குறூப்' படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியவருமான ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி ஒரு புதிய படத்தின் நடித்து வருகிறார்.
வழக்கம் போல இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் தன்னை ஈர்த்ததால், தானே இந்த படத்தை தயாரித்தும் வருகிறார். குறிப்பாக இந்த படத்தில் மம்முட்டி வில்லனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வில்லன் நடிகரான விநாயகன் நடித்து வருகிறார். இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‛கலம்காவல்' என டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் மம்முட்டி சிகரட்டை தனது வாயில் வைத்து கடிப்பது போன்று அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் மீது ஒரு விதமான ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.