நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகையும், தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி தனது 101வது வயதில் நேற்று காலமானார். 1924ம் ஆண்டு பிறந்தவர் சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வந்தார்.
பிரபல இயக்குனரான புல்லையா, குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க 'அனசுயா' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். அப்போது 'துலாபாரம்' நாடகத்தைப் பார்த்தவர் அதில் நடித்த கிருஷ்ணவேணியை 'அனசுயா' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்தார்.
அப்போது கிருஷ்ணவேணிக்கு 10 வயது. அவருடன் 60 குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க அந்தப் படம் முழுவதுமாக கல்கத்தாவில் தயாரானது.
1937ல் சிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு, கிருஷ்ணவேணியை சென்னைக்கு அழைத்து வந்தார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்தார் கிருஷ்ணவேணி. சொந்தக்குரலில் பாடும் திறமையும் கொண்டவர்.
1940ல் மிர்சாபுரம் ராஜா என்ற பிரபல இயக்குனர், தயாரிப்பாளரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணவேணி. அதன்பின் கணவரது தயாரிப்பில் மட்டுமே நடித்து, அவர்களது ஷோபனாச்சலா ஸ்டுடியோவையும் நிர்வாகம் செய்து வந்தார்.
1942ம் ஆண்டு தெலுங்கு நடிகரான என்டி ராமராவை 'மனதேசம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் கிருஷ்ணவேணி. அந்தப் படத்தை எல்வி பிரசாத் இயக்கினார்.
கிருஷ்ணவேணி மறைவுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




