‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

நடிகை த்ரிஷா பிராணிகள் மீது அதிகப் பாசம் கொண்டவர். அவர் செல்லமாக வளர்த்து வந்த 'ஸாரோ' என்ற நாய் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்து போனது. அது குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டிருந்த த்ரிஷா, கொஞ்ச நாட்களுக்கு வேலைகளிலிருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகியருக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
அவர் நடித்த 'விடாமுயற்சி' படம் வெளிவந்த போது கூட அது குறித்து கூட ஒரே ஒரு பதிவை மட்டுமே பதிவிட்டிருந்தார். இந்நிலையில் த்ரிஷா தற்போது புதிதாக நாய்க்குட்டி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார். “இஸ்ஸி'யை நான் தத்தெடுத்த நாள், அவள் என்னைக் காப்பாற்றினாள். எனது வாழ்க்கையில் ஒளி தேவைப்பட்ட போது, கடவுள் என்னிடம் அனுப்பி வைத்துள்ளார். என்றென்றும் என் காதலர் இவள் தான்” என அது குறித்து நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.