ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க களமிறங்கி இருக்கிறார் நடிகை பாக்யஸ்ரீ. மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட 'காந்தா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். செல்வமணி செல்வராஜ் இந்த 'காந்தா' படத்தை இயக்குகிறார்.இந்த திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும், நடிகர் துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த இவர் மராட்டிய அரச குடும்பத்தில் பிறந்தவர். நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு மராட்டிய படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் படத்தில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ கூறியது, இதுபோல் ஒரு மிகச்சிறந்த அறிமுகம் தமிழில் எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது. எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும், அந்த மொழியைக் கற்றுக் கொள்ள மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டேன். அதனால் எனது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடிந்தது. 'காந்தா' திரைப்படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்கள் என்னை ஏற்றுக் இங்குள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அதோடு நிறைய தமிழ் படங்களிலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.




