ஷபானா ஆஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள ஜோதிகா : காலில் விழுந்து ஆசி | மார்ச் முதல் வாரத்தில் ஓடிடிக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி! | ரஜினியின் கூலி படத்தில் சிங்கிள் பாடலுக்கு நடனமாடும் பூஜா ஹெக்டே | ஆசிரியரின் அறிவுரையை மாத்தி யோசித்த பிரதீப் ரங்கநாதன்; சுவாரஸ்ய பின்னணி என்ன? | 'மரகத நாணயம் 2' கதை பெரியதாக இருக்கும்: ஆதி | 'தி கோட்' படத்தின் உண்மையான வசூல் என்ன?: தயாரிப்பாளர் சொன்ன தகவல் | தயாராகிறது 'சுந்தரா டிராவல்ஸ்' இரண்டாம் பாகம் | மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி பாண்டியன் | சம்பளமா? காப்பிரைட்டா?: இசை அமைப்பாளர்களுக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை | சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு திருமணம் |
தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க களமிறங்கி இருக்கிறார் நடிகை பாக்யஸ்ரீ. மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட 'காந்தா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். செல்வமணி செல்வராஜ் இந்த 'காந்தா' படத்தை இயக்குகிறார்.இந்த திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும், நடிகர் துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த இவர் மராட்டிய அரச குடும்பத்தில் பிறந்தவர். நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு மராட்டிய படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் படத்தில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ கூறியது, இதுபோல் ஒரு மிகச்சிறந்த அறிமுகம் தமிழில் எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது. எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும், அந்த மொழியைக் கற்றுக் கொள்ள மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டேன். அதனால் எனது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடிந்தது. 'காந்தா' திரைப்படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்கள் என்னை ஏற்றுக் இங்குள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அதோடு நிறைய தமிழ் படங்களிலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.