எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. அதற்கு முன் பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக கலக்கிய சூரி தற்போது ஹீரோவாக பயணித்து வருகிறார். விடுதலை 1 மற்றும் 2, கருடன், கொட்டுகாளி ஆகிய படங்களில் லீடு ரோலில் நடித்து இன்று முன்னணி ஹீரோவாக மாறி இருக்கும் சூரி தற்போது 'மாமன்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். இதுதவிர ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சூரி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு கட்டிடத்தில் கயிற்றில் தொங்கிய படி தொழிலாளி ஒருவர் பெயிண்டிங் செய்வதை எதிரே உள்ள ஓட்டலில் தங்கி இருந்த சூரி அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். வீடியோ உடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுவர்களில் நிறங்களை பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன் என்று சூரி பதிவிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சூரி பெயிண்டிங் வேலை செய்பவராக இருந்துள்ளார். அதன் பிறகு லைட் மேன் ஆக சினிமாவில் நுழைந்து பின்னர் காமெடி நடிகராகி, இன்று ஹீரோவாக வளர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் தான் செய்த பழைய தொழிலை மறக்காமல் வீடியோவாக சூரி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.