ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களை பயன்படுத்தி வரும் பிரபலங்களின் கணக்குகள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதும் அவற்றில் சம்பந்தமில்லாத தகவல்கள் பகிரப்பட்டு பரபரப்பு ஏற்படுத்துவதும் அவ்வப்போது நடைபெற்று வருவதுதான். அந்த வகையில் தற்போது சைபர் கிரைம் விஷமிகள் மூலமாக நடிகை திரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட பின் அதில் திரிஷா கிரிப்டோ கரன்சி குறித்து பகிர்ந்துள்ளதாக ஒரு ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக இதுகுறித்து பகிர்ந்துள்ள திரிஷா, தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மீட்டெடுக்கும் வரை அதில் எது பதிவிடப்பட்டாலும் அது தன்னுடையது பதிவு அல்ல என்றும் ஒரு எச்சரிக்கை விளக்கம் அளித்துள்ளார்.
திரிஷா இன்ஸ்டாவில் எச்சரிக்கை பதிவை இடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, எக்ஸ் தளத்தில் ஹேக்கர்கள் பதிவு செய்த டுவீட் டெலீட் செய்யப்பட்டது. இதனால் எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதா அல்லது ஹேக்கர்கள் உஷாராகிவிட்டனரா என்பது தெரியவில்லை. திரிஷாவும் இதுவரை மீட்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை.