ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களை பயன்படுத்தி வரும் பிரபலங்களின் கணக்குகள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதும் அவற்றில் சம்பந்தமில்லாத தகவல்கள் பகிரப்பட்டு பரபரப்பு ஏற்படுத்துவதும் அவ்வப்போது நடைபெற்று வருவதுதான். அந்த வகையில் தற்போது சைபர் கிரைம் விஷமிகள் மூலமாக நடிகை திரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட பின் அதில் திரிஷா கிரிப்டோ கரன்சி குறித்து பகிர்ந்துள்ளதாக ஒரு ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக இதுகுறித்து பகிர்ந்துள்ள திரிஷா, தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மீட்டெடுக்கும் வரை அதில் எது பதிவிடப்பட்டாலும் அது தன்னுடையது பதிவு அல்ல என்றும் ஒரு எச்சரிக்கை விளக்கம் அளித்துள்ளார்.
திரிஷா இன்ஸ்டாவில் எச்சரிக்கை பதிவை இடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, எக்ஸ் தளத்தில் ஹேக்கர்கள் பதிவு செய்த டுவீட் டெலீட் செய்யப்பட்டது. இதனால் எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதா அல்லது ஹேக்கர்கள் உஷாராகிவிட்டனரா என்பது தெரியவில்லை. திரிஷாவும் இதுவரை மீட்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை.




