காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களை பயன்படுத்தி வரும் பிரபலங்களின் கணக்குகள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதும் அவற்றில் சம்பந்தமில்லாத தகவல்கள் பகிரப்பட்டு பரபரப்பு ஏற்படுத்துவதும் அவ்வப்போது நடைபெற்று வருவதுதான். அந்த வகையில் தற்போது சைபர் கிரைம் விஷமிகள் மூலமாக நடிகை திரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட பின் அதில் திரிஷா கிரிப்டோ கரன்சி குறித்து பகிர்ந்துள்ளதாக ஒரு ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக இதுகுறித்து பகிர்ந்துள்ள திரிஷா, தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மீட்டெடுக்கும் வரை அதில் எது பதிவிடப்பட்டாலும் அது தன்னுடையது பதிவு அல்ல என்றும் ஒரு எச்சரிக்கை விளக்கம் அளித்துள்ளார்.
திரிஷா இன்ஸ்டாவில் எச்சரிக்கை பதிவை இடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, எக்ஸ் தளத்தில் ஹேக்கர்கள் பதிவு செய்த டுவீட் டெலீட் செய்யப்பட்டது. இதனால் எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதா அல்லது ஹேக்கர்கள் உஷாராகிவிட்டனரா என்பது தெரியவில்லை. திரிஷாவும் இதுவரை மீட்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை.