பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

'மெய்யழகன்' படத்தை அடுத்து 'வாத்தியார்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் 'டாணாக்காரன்' என்ற படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் தன்னுடைய 29வது படத்தில் நடிக்க போகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கடல் பின்னணியை கொண்ட கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகப்போகிறது.
மேலும் ஏற்கனவே கார்த்தி நடித்து வெளியான 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த 'கார்த்தி 29' படத்தையும் இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.