எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'மெய்யழகன்' படத்தை அடுத்து 'வாத்தியார்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் 'டாணாக்காரன்' என்ற படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் தன்னுடைய 29வது படத்தில் நடிக்க போகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கடல் பின்னணியை கொண்ட கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகப்போகிறது.
மேலும் ஏற்கனவே கார்த்தி நடித்து வெளியான 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த 'கார்த்தி 29' படத்தையும் இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.