ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள ‛பிரம்ம ஆனந்தம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். விழாவில் அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் பெண் பிள்ளைகள் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையாகி உள்ளது.
அவர் கூறியதாவது, ‛‛என் வீட்டில் என்னை சுற்றி அதிகம் பெண்களே இருக்கிறார்கள். இதனால் மகளிர் விடுதியின் வார்டனை போன்று நான் உணர்கிறேன். மேலும் எனது பரம்பரை தொடர இந்த முறையாவது மகனை பெற வேண்டும் என என் மகன் ராம் சரணை கேட்டுக் கொள்கிறேன். மேலும் ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று பயப்படுகிறேன்'' என தெரிவித்தார்.
சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரணுக்கு க்ளின் காரா என்ற மகள் உள்ளார். மேலும் இரு மகள்களான சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருக்கும் தலா இரண்டு மகள்கள் உள்ளனர்.
பாலின பாகுபாடு மறைந்து ஆண், பெண் சமம் என உலகம் சென்று கொண்டிருக்கும் சூழலில் ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும், அவர்கள் தான் குடும்பத்தின் வாரிசு என்பது போன்று பேசியிருக்கும் சிரஞ்சீவியின் கருத்து சர்ச்சையாகி இருப்பதுடன் பலரும் வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.