யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள ‛பிரம்ம ஆனந்தம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். விழாவில் அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் பெண் பிள்ளைகள் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையாகி உள்ளது.
அவர் கூறியதாவது, ‛‛என் வீட்டில் என்னை சுற்றி அதிகம் பெண்களே இருக்கிறார்கள். இதனால் மகளிர் விடுதியின் வார்டனை போன்று நான் உணர்கிறேன். மேலும் எனது பரம்பரை தொடர இந்த முறையாவது மகனை பெற வேண்டும் என என் மகன் ராம் சரணை கேட்டுக் கொள்கிறேன். மேலும் ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று பயப்படுகிறேன்'' என தெரிவித்தார்.
சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரணுக்கு க்ளின் காரா என்ற மகள் உள்ளார். மேலும் இரு மகள்களான சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருக்கும் தலா இரண்டு மகள்கள் உள்ளனர்.
பாலின பாகுபாடு மறைந்து ஆண், பெண் சமம் என உலகம் சென்று கொண்டிருக்கும் சூழலில் ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும், அவர்கள் தான் குடும்பத்தின் வாரிசு என்பது போன்று பேசியிருக்கும் சிரஞ்சீவியின் கருத்து சர்ச்சையாகி இருப்பதுடன் பலரும் வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.