கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சாந்தினி தமிழரசன் தனது திருமண வாழ்க்கை குறித்தும் தனது கேரியர் குறித்தும் பேசியிருக்கிறார். 'பயர்' படத்தின் புரமோஷனின் போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'எங்களுக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதற்கு ஒன்றரை வருடம் முன்னதாகவே திருமணம் குறித்து எல்லாவற்றையும் பேசி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் தான் நான் நடித்த படங்கள் ரிலீஸானது. ஒருவேளை அதற்கு முன் ரிலீஸாகியிருந்தால் நான் சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு போவது பற்றி யோசித்திருப்பேன். திருமணத்தால் என்னுடைய கேரியர் பாதிக்கும் என்று நினைத்தேன். அதனால் எங்களது திருமணத்தை இன்செக்யூராக தான் பார்த்தேன். ஆனாலும் என்னுடைய திருமணத்தை நான் எஞ்சாய் செய்தேன்.
நந்தாவும் என் கேரியருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவார். இன்ஸ்டாகிராமில் கிளாமராக போட்டோஷூட் நடத்துவேன். அதற்கெல்லாம் நந்தா கோபப்பட்டதே கிடையாது. நான் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அது எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. என்னதான் நான் திறமையை காட்ட நினைத்தாலும் அதற்கான சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை' என அந்த பேட்டியில் சாந்தினி பேசியுள்ளார்.




