அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹரிகா. இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். இவருக்கும் வெங்கட சைதன்யா ஜொன்னலகட்டா என்பவருக்கும் கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் உதய்ப்பூரில் உள்ள ஓபராய் உதய்விலாஸில் திருமணம் நடந்தது.
கடந்த சில மாதங்களாகவே நிஹரிகா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லப்பட்டது. கடந்த மாதம் நிஹரிகாவின் கணவர் வெங்கட சைதன்யா அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் நிஹரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து, அவரையும் அன்பாலோ செய்தார். ஆனாலும், நிஹரிகா அவரை பாலோ செய்து கொண்டுதான் இருந்தார்.
ஆனால், தற்போது நிஹரிகாவும் அவருடைய இன்ஸ்டாவிலிருந்து வெங்கட சைதன்யா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டு அவரை அன்பாலோ செய்துவிட்டார். விரைவில் இருவரும் அவர்களது விவாகரத்து பற்றிய அறிவிப்பை வெளியிடலாம். நிஹரிகா சமீபத்தில் சொந்தமாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழிலும் படங்களைத் தயாரிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியும்.