Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

11 பிப், 2025 - 11:16 IST
எழுத்தின் அளவு:
Famous-actress-secret-confession-in-court-Look-Out-Notes-for-the-Director-who-escaped-abroad


மலையாள திரையுலகில் சர்ச்சைக்குரிய அதேசமயம் சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெறும் படங்களாக தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குனர் சனல்குமார் சசிதரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛காயட்டம்' என்கிற படத்தை இயக்கினார். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவரும் சமீப காலமாக தமிழில் தனுஷ், அஜித், ரஜினி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்து வருபவருமான நடிகை, நடித்ததுடன் அவரே அந்த படத்தை தயாரித்தும் இருந்தார். ஆனால் படம் முடிவதற்குள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இயக்குனரிடமிருந்து ஒதுங்கிய நடிகை படத்தை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைக்கு சிலரால் ஆபத்து என்றும் அவரை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டார் இயக்குனர் சனல்குமார். ஆனால் தேவையில்லாமல் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி காவல்துறையில் நடிகை அளித்த புகாரில் சனல் குமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். இது 2022-ல் நடந்தது. தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இயக்குனர் சனல்குமார் சசிதரன் சம்பந்தப்பட்ட நடிகை மீது கடந்த முறை கூறியது போன்று சில விஷயங்களை கூறியதுடன் காயட்டம் படத்தை தான் யூடியூப்பில் இலவசமாக வெளியிடுவேன் என்றும் இங்கே தனக்கு மிரட்டல்கள் இருப்பதால் அமெரிக்கா செல்ல இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இப்போதும் சம்பந்தப்பட்ட நடிகை தன்மீது அவதூறு செய்தி பரப்புவதாக அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதே சமயம் இயக்குனர் சனல்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொன்னபடி அமெரிக்காவிற்கு கிளம்பி சென்று விட்டார். இந்த நிலையில் கேரளாவில் ஆலுவா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் நடிக்கையிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் இருக்கும் இயக்குநர் சனல்குமாரை இந்தியாவிற்கு வரவழைப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் நீதிமன்றத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவரை இந்தியாவிற்கு வரவழைப்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் இறங்கி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எம்.டி வாசுதேவன் நாயர் வீட்டிற்கு சென்று சுரேஷ்கோபி நினைவஞ்சலிஎம்.டி வாசுதேவன் நாயர் வீட்டிற்கு ... 10 வருடத்திற்கு பிறகு போதை வழக்கில் வில்லன் நடிகர் விடுதலை 10 வருடத்திற்கு பிறகு போதை வழக்கில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in