எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் விடாமுற்சி, 'பிரேக்டவுன்' என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று ரசிகர்கள் கணித்து சொல்லிவிட்டார்கள். ஹாலிவுட்டோ, கொரியனோ எந்த மொழி படத்தை காப்பி அடித்தாலும் ரசிகர்கள் கண்டுபிடித்து அதை வெட்டவெளிச்சமாக்கி விடுவார்கள். காரணம் இப்போது அவர்கள் ஓடிடி தளங்கள் மூலம் உலக படங்களை பார்த்து வருகிறார்கள். சினிமா பற்றிய தேடலும் அதிகம். ஆனால் அந்த காலத்தில் அப்படியில்லை ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கி சான் படங்கள் முக்கியமான சில படங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகும். அதுவும் ஆங்கிலத்தில்தான் வெளியாகும்.
இப்படியான காலகட்டத்திலேயே சிவாஜி நடிப்பில் வெளியான 'கருடா சௌவுக்யமா' என்ற படம் ஹாலிவுட்டில் வெளியான 'காட்பாதர்' படத்தின் தழுவல் என்று கண்டுபிடித்து சொல்லிவிட்டார்கள். கதைப்படி சிவாஜி பகலில் ஒரு அச்சகம் நடத்துவார், இரவில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பவர்களின் வீட்டுக்குள் புகுந்து அதை கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு கொடுத்து விட்டு வருவார். இது அவரது குடும்பத்துக்கே தெரியாது. தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
'காட்பாதர்' படத்தின் மைய கருதான் இந்த படத்தின் கதை. மற்றபடி திரைக்கதை நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதப்பட்டிருக்கும். சிவாஜியுடன் சுஜாதா, தியாகராஜன், அம்பிகா, மோகன், ராஜலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். வியட்நாம் வீடு சுந்தரம் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார், கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி இருந்தார்.