பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை |
சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் விடாமுற்சி, 'பிரேக்டவுன்' என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று ரசிகர்கள் கணித்து சொல்லிவிட்டார்கள். ஹாலிவுட்டோ, கொரியனோ எந்த மொழி படத்தை காப்பி அடித்தாலும் ரசிகர்கள் கண்டுபிடித்து அதை வெட்டவெளிச்சமாக்கி விடுவார்கள். காரணம் இப்போது அவர்கள் ஓடிடி தளங்கள் மூலம் உலக படங்களை பார்த்து வருகிறார்கள். சினிமா பற்றிய தேடலும் அதிகம். ஆனால் அந்த காலத்தில் அப்படியில்லை ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கி சான் படங்கள் முக்கியமான சில படங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகும். அதுவும் ஆங்கிலத்தில்தான் வெளியாகும்.
இப்படியான காலகட்டத்திலேயே சிவாஜி நடிப்பில் வெளியான 'கருடா சௌவுக்யமா' என்ற படம் ஹாலிவுட்டில் வெளியான 'காட்பாதர்' படத்தின் தழுவல் என்று கண்டுபிடித்து சொல்லிவிட்டார்கள். கதைப்படி சிவாஜி பகலில் ஒரு அச்சகம் நடத்துவார், இரவில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பவர்களின் வீட்டுக்குள் புகுந்து அதை கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு கொடுத்து விட்டு வருவார். இது அவரது குடும்பத்துக்கே தெரியாது. தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
'காட்பாதர்' படத்தின் மைய கருதான் இந்த படத்தின் கதை. மற்றபடி திரைக்கதை நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதப்பட்டிருக்கும். சிவாஜியுடன் சுஜாதா, தியாகராஜன், அம்பிகா, மோகன், ராஜலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். வியட்நாம் வீடு சுந்தரம் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார், கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி இருந்தார்.