குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி |

அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடித்த திரிஷா, இசை அமைத்த அனிருத் ஆகிய இருவரும் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். பின்னர் படம் முடிந்து வெளியில் வந்த அனிருத் தனது காரை எடுக்கச் சென்றபோது அது போக்குவரத்து போலீசாரால் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'கில் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறி ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதை கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்றார் அனிருத். அனிருத் தாமதமாக படத்திற்கு வந்ததால் தியேட்டர் பார்க்கிங் நிறைந்து விட்டது. அதனால் வெளியில் காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். திரிஷா உள்ளிட்ட மற்றவர்கள் முன்னமே வந்து விட்டதால் அவர்கள் தியேட்டர் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளர்.
நேற்று மட்டும் சென்னையில் 'விடாமுயற்சி' படம் பார்க்க வந்து நோ பார்க்கில் வாகனங்களை நிறுத்தியவர்களிடமிருந்து 50 ஆயிரத்துக்கும் மேல் நோ பார்க்கிங் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.