ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

சட்டம் ஒரு இருட்டரை, நெஞ்சில் துணிவிருந்தால், நீதி பிழைத்தது என தொடர்ந்து ஆக்ஷன் கலந்த சமூக படங்களை இயக்கி கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரை அன்றைய மீடியாக்கள் 'மசாலா இயக்குனர்' என்றே குறிப்பிட்டு வந்தது. இதனை மாற்ற விரும்பினார் எஸ்.ஏ,சந்திரசேகர். உணர்வு பூர்வமான ஒரு கதையை கொடுக்க விரும்பினார். அந்த முயற்சியில் அவர் எடுத்த படம்தான் 'இதயம் பேசுகிறது'.
இந்த படத்தின் டைட்டில் கார்டில் முதலில் 'மசாலா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கும்' என்று வரும் பின்னர் ஒரு கை வந்து மசாலா இயக்குனர் என்பதை அழிக்கும். இந்த படத்தில் விஜயராஜ், ரவீந்தர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஷியாம் இசை அமைத்திருந்தார், டி.டி.பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருக்கும் கதையின் நாயகன் மனைவி மீது சந்தேகம் கொள்கிறான். அவனது நண்பன் வீட்டில் தனது மனைவியின் புகைப்படத்தை காண்கிறான். சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. எஸ்.ஏ.சந்திரசேகர் உருகி உருகி இந்த படத்தை எடுத்திருந்தாலும் படம் தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் ஆக்ஷன் களத்திற்கே திரும்பி 'பட்டணத்து ராஜாக்கள்' படத்தை விஜயகாந்தை வைத்து எடுத்தார்.