மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழில் 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு மாத காலமாக அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சிவராஜ்குமார் நேற்று முன்தினம் கர்நாடகா திரும்பினார்.
அதையடுத்து கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா, சிவராஜ்குமாரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது மீடியாக்களை சந்தித்து சிவராஜ்குமார், ''புற்றுநோய் என்று மருத்துவர்கள் சொன்னதும் பயந்துவிட்டேன். ஆனால் ரசிகர்களும், நண்பர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து பக்கபலமாக இருந்தார்கள். இப்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமாகி வருகிறேன். அதனால் விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி ரசிகர்களை மகிழ்விப்பேன்'' என்று தெரிவித்திருக்கிறார் சிவராஜ் குமார்.