ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நயன்தாராவுக்கு புதிய பட வாய்ப்புகள நிறைய வருகிறதாம். அந்த படங்களில் நடிப்பவர்களும் முன்னணி ஹீரோக்களாக இருக்கிறார்களாம். ஆனால், கதை என்று கேட்கிறபோது, நயன்தாராவை முத்தின நடிகை என்ற கணக்கில்தான் வைக்கிறார்களாம். அதாவது, பிளாஷ்பேக்கில் வருவது, இல்லையேல் ஏதாவது கேரக்டரில் வந்து செல்வது எனறுதான் கதை சொல்கிறார்களாம்.
அதோடு, ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் இல்லையாம். தற்போது வளர்ந்து வரும் இளவட்ட நடிகைகளைதான் ஜோடி சேர்க்கிறார்களாம். தமிழில் நயன்தாரா பெரிய அளவில் எதிர்பார்த்த வலை படத்தில் டாப்ஸிக்குத்தான் முக்கியத்துவமாம். அதேபோல் ராஜாராணியில் நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீம்தான் ஆர்யாவுக்கு ஜோடியாம். அதனால் நயன்தாராவை முக்கியமான கேரக்டர்களுக்கே பயன்படுத்தியிருக்கிறார்களாம்.
அதனால்தான் இப்போது, ஹீரோயிசமுள்ள படங்கள் தனக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நயன்தாரா. அதன்காரணமாகவே கஹானி ரீமேக் படத்தில் நடிப்பவர், அதேபோன்று தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடி வருகிறாராம். அப்படிப்பட்ட கதைகளில் நடிக்கிறபோது ஒரு ஹீரோவுக்குரிய அநதஸ்து தனக்கு கிடைக்கும் என்று கருதுகிறாராம் நயன்தாரா.