மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதில் அவரது ஜோடியாக வடிவுக்கரசி நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி ஜோடியாக வடிவுக்கரசி நடித்தார்.
இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், நடன இயக்குனர் சாண்டி, விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் பிரிட்டோ கூறும்போது “நான்கு விதமான வாழ்க்கை - நான்கு கதைகள் - அதை இணைக்கும் ஒரு புள்ளி என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை - வேளாங்கண்ணி - சென்னை - திருத்தணி என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி உள்ளன” என்றார்.




