என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். தீவிர அரசியலில் இறங்குவதால் சினிமாவில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் விஜய் 69 படம்தான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்னும் ஒரு படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் அதற்காக அவர் கதை எழுதி வருவதாகவும் சொல்கிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் 69வது படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரலாம். அதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.
அடுத்தாண்டு மே மாதம்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். அதற்காக ஜனவரியில் இருந்து சுற்றுப் பயணம் செய்தாலே போதுமானது. மேலும் விஜய்யின் 69வது படம் தெலுங்கில் வந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. தனது கடைசி படத்தை ஒரு நேரடிப் படமாக நடித்து முடிக்க விஜய் விரும்புகிறார் என்கிறார்கள். அதனால்தான் வெங்கட் பிரபுவை கதை எழுத சொல்லியிருக்கிறாராம். குறுகிய காலத்தில் அப்படத்தை எடுத்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். 'மாஸ்டர், லியோ' படங்களைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தைத் தயாரிக்கலாம் என்று தகவல்.