'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

பாலிவுட் இளம் நடிகர் அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மேரே ஹஸ்பண்ட் கி பீவி'. இந்த படத்தை முடாசர் ஆசிஷ் என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி மும்பையில் உள்ள இம்பீரியல் பேலசில் உள்ள ராயல் பாம்ஸ் என்கிற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சிக்காக தற்காலிக அரங்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விஜய் கங்குலி இந்த பாடலுக்கான நடன காட்சிகளை இயக்கி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் நடனம் ஆடிக்கொண்டிருந்த அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி மற்றும் சில நடன கலைஞர்கள் மீது விழுந்தது.
பெரிய அளவு ஆபத்து இல்லை என்றாலும் அனைவருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. இது குறித்து தொழிலாளர் சம்மேளன தலைவர் கூறும்போது, “அந்த கட்டடம் ரொம்பவே பழமை வாய்ந்த கட்டடம். அது மட்டுமல்ல நடன காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களில் அதிக அளவு ஒலி எழுப்பப்பட்டதால் அந்த அதிர்வு தாங்காமல் மேற்கூறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து உள்ளது” என்று கூறியுள்ளார்.