தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட் இளம் நடிகர் அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மேரே ஹஸ்பண்ட் கி பீவி'. இந்த படத்தை முடாசர் ஆசிஷ் என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி மும்பையில் உள்ள இம்பீரியல் பேலசில் உள்ள ராயல் பாம்ஸ் என்கிற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சிக்காக தற்காலிக அரங்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விஜய் கங்குலி இந்த பாடலுக்கான நடன காட்சிகளை இயக்கி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் நடனம் ஆடிக்கொண்டிருந்த அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி மற்றும் சில நடன கலைஞர்கள் மீது விழுந்தது.
பெரிய அளவு ஆபத்து இல்லை என்றாலும் அனைவருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. இது குறித்து தொழிலாளர் சம்மேளன தலைவர் கூறும்போது, “அந்த கட்டடம் ரொம்பவே பழமை வாய்ந்த கட்டடம். அது மட்டுமல்ல நடன காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களில் அதிக அளவு ஒலி எழுப்பப்பட்டதால் அந்த அதிர்வு தாங்காமல் மேற்கூறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து உள்ளது” என்று கூறியுள்ளார்.




