லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

பாலிவுட் இளம் நடிகர் அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மேரே ஹஸ்பண்ட் கி பீவி'. இந்த படத்தை முடாசர் ஆசிஷ் என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி மும்பையில் உள்ள இம்பீரியல் பேலசில் உள்ள ராயல் பாம்ஸ் என்கிற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சிக்காக தற்காலிக அரங்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விஜய் கங்குலி இந்த பாடலுக்கான நடன காட்சிகளை இயக்கி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் நடனம் ஆடிக்கொண்டிருந்த அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி மற்றும் சில நடன கலைஞர்கள் மீது விழுந்தது.
பெரிய அளவு ஆபத்து இல்லை என்றாலும் அனைவருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. இது குறித்து தொழிலாளர் சம்மேளன தலைவர் கூறும்போது, “அந்த கட்டடம் ரொம்பவே பழமை வாய்ந்த கட்டடம். அது மட்டுமல்ல நடன காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களில் அதிக அளவு ஒலி எழுப்பப்பட்டதால் அந்த அதிர்வு தாங்காமல் மேற்கூறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து உள்ளது” என்று கூறியுள்ளார்.




