சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் கதாநாயகன், குணசித்திர வேடம், வில்லன் வேடம் ஆகிய பரிமாணங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் சினிமா துறையில் உள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி முதல் முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார் என அறிவித்துள்ளனர். அதன்படி, ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத், பவ்யா தாரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' என்கிற படத்தில் நிவாஸ் கே இசையில் "ஏதோ பேசத் தானே" என்னும் பாடலை விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதனை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார் என அறிவித்துள்ளனர்.