ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? |
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி என்னும் பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். அங்குள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சக்தி விநாயகர் கோயிலில் 20ம் ஆண்டு பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, ''தாராவியில் இவ்வளவு பேர் இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை, சொந்த ஊரில் இருப்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது. சக்தி விநாயகர் கோவில் 20ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி. நான் கேரளாவை அடிப்படையாக கொண்டதால் என் தமிழ் ரொம்ப சுத்தமா இருக்காது. ஆனாலும், என்னை வாழவைத்தது தமிழகம்தான்'' எனப் பேசினார்.