நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி |

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி என்னும் பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். அங்குள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சக்தி விநாயகர் கோயிலில் 20ம் ஆண்டு பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, ''தாராவியில் இவ்வளவு பேர் இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை, சொந்த ஊரில் இருப்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது. சக்தி விநாயகர் கோவில் 20ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி. நான் கேரளாவை அடிப்படையாக கொண்டதால் என் தமிழ் ரொம்ப சுத்தமா இருக்காது. ஆனாலும், என்னை வாழவைத்தது தமிழகம்தான்'' எனப் பேசினார்.