மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி என்னும் பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். அங்குள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சக்தி விநாயகர் கோயிலில் 20ம் ஆண்டு பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, ''தாராவியில் இவ்வளவு பேர் இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை, சொந்த ஊரில் இருப்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது. சக்தி விநாயகர் கோவில் 20ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி. நான் கேரளாவை அடிப்படையாக கொண்டதால் என் தமிழ் ரொம்ப சுத்தமா இருக்காது. ஆனாலும், என்னை வாழவைத்தது தமிழகம்தான்'' எனப் பேசினார்.