பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்ஜர் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியன் 3, வேள்பாரி போன்ற படங்களை அவர் இயக்குவார் என்று தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பயோபிக் படம் என்றால் யாருடைய வாழ்க்கை வரலாறை நீங்கள் படமாக்குவீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இதுவரை எனக்கு யாருடைய வாழ்க்கை வரலாறு படத்தையும் இயக்க வேண்டும் என்ற யோசனை வந்ததில்லை. ஒருவேளை அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ரஜினி சாரின் பயோபிக் படத்தைதான் இயக்குவேன். அவரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரியும். என்றாலும், ரசிகர்களுக்கு தெரியாத பல அரிய தகவல்களையும் அந்த படத்தில் சொல்ல வேண்டும் . ரஜினி வாழ்க்கை வரலாறு படத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்த எந்த ஐடியாவும் இல்லை. அது குறித்து சூழ்நிலை அமையும்போது தான் யோசிப்பேன் என்று தெரிவித்துள்ளார் ஷங்கர்.