புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் | 'வலிமை', 'துணிவு' சாதனையைக் கூட நெருங்காத 'விடாமுயற்சி' |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் பாபு குடும்பத்துக்குள் சொத்து தகராறு நடந்து வருகிறது. தந்தையும் மகனும் சண்டை போட்டனர். இது குறித்து பேட்டி எடுப்பதற்காக, மோகன்பாபு வீட்டுக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். அப்போது, மோகன்பாபு பத்திரிகையாளர் ஒருவரின் மைக்கை மைக்கை பறித்து பத்திரிகையாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் மோகன் பாபு கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மோகன் பாபு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோகன்பாபு மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு இரண்டு நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மோகன்பாபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன்பாபு மன்னிப்பு கேட்கவும், இழப்பீடு அளிக்கவும் தயாராக இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து 4 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம். அதுவரை மோகன் பாபுவை கைது செய்ய தடை விதித்தது.