எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் பாபு குடும்பத்துக்குள் சொத்து தகராறு நடந்து வருகிறது. தந்தையும் மகனும் சண்டை போட்டனர். இது குறித்து பேட்டி எடுப்பதற்காக, மோகன்பாபு வீட்டுக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். அப்போது, மோகன்பாபு பத்திரிகையாளர் ஒருவரின் மைக்கை மைக்கை பறித்து பத்திரிகையாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் மோகன் பாபு கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மோகன் பாபு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோகன்பாபு மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு இரண்டு நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மோகன்பாபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன்பாபு மன்னிப்பு கேட்கவும், இழப்பீடு அளிக்கவும் தயாராக இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து 4 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம். அதுவரை மோகன் பாபுவை கைது செய்ய தடை விதித்தது.