கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
இலங்கை வாழ் தமிழரான சிலோன் மனோகர் இலங்கையில் இருந்து மேல்படிப்புக்காக சென்னை வந்தார். திருச்சியில் படித்துக் கொண்டிருந்த அவர் விடுமுறைகளில் சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடினார். அதற்கு காரணம் இன்றைக்கு யோகி பாபுவுக்கு இருப்பது மாதிரியான சிகை அழகு அவருக்கு. படிப்பு முடிந்ததும் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் இலங்கை திரும்பினார். அங்கு பாப் இசை பாடல்களை பாடினார். சிங்களம், தமிழ் இரு மொழிகளிலும் பாப் பாடிய அவர் அங்கு பிரபலமானார்.
அவர் பாடிய 'சுராங்கனி... சுராங்கனி...' என்ற பாடல் இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுக்க பரவியது. தமிழ்நாட்டிலும் அந்த பாடல் பிரபலமானது. அந்த பாடலை பாடுவதற்காகவே மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்த மனோகருக்கு சினிமா கதவுகள் திறந்தன. வில்லன், காமெடி கேரக்டர்களில் நடித்தார். இசை கச்சேரிகளில் பாடல்களை பாடினார். குறிப்பாக சுராங்கணியை பாடினார். அந்த ஒரு பாடலை பாடுவதற்காகவே அவரை இசை கச்சேரிகளில் பாட அழைத்தார்கள். அந்த ஒரே பாடலை ஒரே நாளில் 4 கச்சேரிகளில் பாடிவிட்டு வருவார்.
சினிமா வருமானத்தை விட சுராங்கணி வருமானம்தான் அவருக்கு பெரிதாக இருந்தது. ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் நின்று போனாலும் அவருக்கு கை கொடுத்தது சுராங்கணி பாடல்தான். வயது முதிர்ச்சி காரணமாக அவர் உடல் நிலை பாதிக்கப்படும் வரை சுராங்கணியை பாடிக்கொண்டே இருந்தார்.
மரணிப்பதற்கு சில நாட்கள் வரை அவர் மருத்துவமனையிலும் சுராங்கணி பாடலை பாடிக்கொண்டே இருந்ததாக சொல்வார்கள். 2018ம் ஆண்டு தனது 74வது வயதில் சிறுநீரக செயலிழப்பால் காலமானார். ஒரே பாடலால் புகழ்பெற்று அந்த பாடலைக் கொண்டே கடைசி வரை வாழ்ந்த கலைஞர் சிலோன் மனோகர்.