பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் |
1970, 80களில் பக்தி படங்கள் ஓடிய தியேட்டர்களில் பெண்கள் அருள் வந்து சாமியடியது நடந்தது . பிற்காலத்தில் அதுவே விளம்பரங்களுக்காக செயற்கையாகவும் நடத்தப்பட்டது. இதற்கு முன்னோடியாக 'என் மனைவி' என்ற படத்தில் இது போன்ற நிகழ்வு நடந்து. இத்தனைக்கும் இந்தப் படம் பக்தி படம் அல்ல. கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்னைகளை கொண்ட காமெடிப் படம்.
இந்த படத்தின் கதை களம் மயிலாப்பூர். மயிலாப்பூர் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கதை நடப்பதாக உருவாகி இருந்தது. இந்த படம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டாலும் மயிலாப்பூர் பின்னணியை காட்டுவதற்காக கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் படமாக்கப்பட்டது. அந்த காட்சிகளில் அப்போது கபாலீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காணப்பட்ட ராஜ கோபுர காட்சியும், கோவில் திருவிழா காட்சியும், கபாலீஸ்வரரின் உற்சவ மூர்த்தியும் அடிக்கடி காட்டப்பட்டது.
இந்த காட்சிகளின் போது ரசிகர்கள் அமர்ந்து படத்தை பார்க்காமல் எழுந்து நின்று பார்த்ததோடு, கைகளை தலைக்குமேல் உயர்த்தி வணங்கவும் செய்தார்கள். அப்போது இது பரபப்பான செய்தி ஆனது.
இந்தப் படத்தை சுதந்தர் ராவ் நட்கர்னி இயக்கி இருந்தார். கே.சாரங்கபாணி, கே.மகாதேவன், எம்.கே.மீனலோசினி, கே.ஆர்.செல்லம் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. 1942ல் வெளிவந்தது.