பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

1970, 80களில் பக்தி படங்கள் ஓடிய தியேட்டர்களில் பெண்கள் அருள் வந்து சாமியடியது நடந்தது . பிற்காலத்தில் அதுவே விளம்பரங்களுக்காக செயற்கையாகவும் நடத்தப்பட்டது. இதற்கு முன்னோடியாக 'என் மனைவி' என்ற படத்தில் இது போன்ற நிகழ்வு நடந்து. இத்தனைக்கும் இந்தப் படம் பக்தி படம் அல்ல. கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்னைகளை கொண்ட காமெடிப் படம்.
இந்த படத்தின் கதை களம் மயிலாப்பூர். மயிலாப்பூர் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கதை நடப்பதாக உருவாகி இருந்தது. இந்த படம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டாலும் மயிலாப்பூர் பின்னணியை காட்டுவதற்காக கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் படமாக்கப்பட்டது. அந்த காட்சிகளில் அப்போது கபாலீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காணப்பட்ட ராஜ கோபுர காட்சியும், கோவில் திருவிழா காட்சியும், கபாலீஸ்வரரின் உற்சவ மூர்த்தியும் அடிக்கடி காட்டப்பட்டது.
இந்த காட்சிகளின் போது ரசிகர்கள் அமர்ந்து படத்தை பார்க்காமல் எழுந்து நின்று பார்த்ததோடு, கைகளை தலைக்குமேல் உயர்த்தி வணங்கவும் செய்தார்கள். அப்போது இது பரபப்பான செய்தி ஆனது.
இந்தப் படத்தை சுதந்தர் ராவ் நட்கர்னி இயக்கி இருந்தார். கே.சாரங்கபாணி, கே.மகாதேவன், எம்.கே.மீனலோசினி, கே.ஆர்.செல்லம் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. 1942ல் வெளிவந்தது.