நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

1970, 80களில் பக்தி படங்கள் ஓடிய தியேட்டர்களில் பெண்கள் அருள் வந்து சாமியடியது நடந்தது . பிற்காலத்தில் அதுவே விளம்பரங்களுக்காக செயற்கையாகவும் நடத்தப்பட்டது. இதற்கு முன்னோடியாக 'என் மனைவி' என்ற படத்தில் இது போன்ற நிகழ்வு நடந்து. இத்தனைக்கும் இந்தப் படம் பக்தி படம் அல்ல. கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்னைகளை கொண்ட காமெடிப் படம்.
இந்த படத்தின் கதை களம் மயிலாப்பூர். மயிலாப்பூர் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கதை நடப்பதாக உருவாகி இருந்தது. இந்த படம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டாலும் மயிலாப்பூர் பின்னணியை காட்டுவதற்காக கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் படமாக்கப்பட்டது. அந்த காட்சிகளில் அப்போது கபாலீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காணப்பட்ட ராஜ கோபுர காட்சியும், கோவில் திருவிழா காட்சியும், கபாலீஸ்வரரின் உற்சவ மூர்த்தியும் அடிக்கடி காட்டப்பட்டது.
இந்த காட்சிகளின் போது ரசிகர்கள் அமர்ந்து படத்தை பார்க்காமல் எழுந்து நின்று பார்த்ததோடு, கைகளை தலைக்குமேல் உயர்த்தி வணங்கவும் செய்தார்கள். அப்போது இது பரபப்பான செய்தி ஆனது.
இந்தப் படத்தை சுதந்தர் ராவ் நட்கர்னி இயக்கி இருந்தார். கே.சாரங்கபாணி, கே.மகாதேவன், எம்.கே.மீனலோசினி, கே.ஆர்.செல்லம் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. 1942ல் வெளிவந்தது.