செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மலையாள சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாறா, எப்.ஐ.ஆர், அன்ன பூரணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச வீடியோ தயாரித்து வெளியிட்டு வருவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் மாலா பார்வதி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
என்னைப்பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்கள் பதிவிடுகின்றனர். யுடியூப்பிலும் நான் நடித்த படங்களில் இருந்து புகைப்படங்களை எடிட் செய்து மோசமாக பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாருடன் அந்த ஆபாச வீடியோக்களையும் ஆதாரமாக போலீஸிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.