லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாறா, எப்.ஐ.ஆர், அன்ன பூரணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச வீடியோ தயாரித்து வெளியிட்டு வருவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் மாலா பார்வதி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
என்னைப்பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்கள் பதிவிடுகின்றனர். யுடியூப்பிலும் நான் நடித்த படங்களில் இருந்து புகைப்படங்களை எடிட் செய்து மோசமாக பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாருடன் அந்த ஆபாச வீடியோக்களையும் ஆதாரமாக போலீஸிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.