கடந்த வாரம் ஒரு வாரிசு அறிமுகம், இந்த வாரம் மற்றொரு வாரிசு அறிமுகம் | கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து |
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இயக்குனர் கே.சுப்ரமணியம். பவளக்கொடி, நவீன சாதரம், குசேலா, பாலயோகினி, சேவாதனம், தியாகபூமி, பிரகலாதா உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கியவர், நிறைய படங்களை தயாரிக்கவும் செய்தவர். சின்ன சின்ன வேடங்களிலும், சிறப்பு தோற்றங்களிலும் நடித்தார். ஆனாலும் அவர் நாயகனாக நடித்த படம் 'அனந்தசயனம்'. இந்த படத்தில் அவரது ஜோடியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமியை திருமணமும் செய்து கொண்டார். அவரே படத்தை தயாரித்து இயக்கினார்.
இவர்களுடன் பட்டு அய்யர், வித்வான் சீனிவாசன், உள்பட பலர் நடித்தார்கள். கமல்கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் அவர் காட்டிய சில மாயாஜால காட்சிகள் அப்போது பேசு பொருளாக இருந்தது. பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். திருவிதாங்கூர் சமஸ்தான ரகசிய அறையில் பாதுகாக்கப்படும் ஒரு முக்கியமான ஓலை சுவடியை அடிப்படையாக கொண்ட பேண்டசி திரில்லர் வகை படம். படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால் அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.