'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி ரஜினியுடன் ஒரு பிரமாண்டமான கதையை படமாக்க இருந்தார். அதன் பட்ஜெட் காரணமாக ரஜினி அந்த படத்தில் நடிக்கவில்லை.
அதன் பின்னர் அந்த கதையில் பட்ஜெட் குறைத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு ராஜ்கமல் நிறுவனமும் வெளியேற வேறு தயாரிப்பாளர்களுக்கான தேடலில் சிம்பு ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இந்த கதையை நடிகர் அஜித் குமாரை சந்தித்து தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். இதன் பேச்சுவார்த்தை முதற்கட்ட அளவில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.