சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி ரஜினியுடன் ஒரு பிரமாண்டமான கதையை படமாக்க இருந்தார். அதன் பட்ஜெட் காரணமாக ரஜினி அந்த படத்தில் நடிக்கவில்லை.
அதன் பின்னர் அந்த கதையில் பட்ஜெட் குறைத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு ராஜ்கமல் நிறுவனமும் வெளியேற வேறு தயாரிப்பாளர்களுக்கான தேடலில் சிம்பு ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இந்த கதையை நடிகர் அஜித் குமாரை சந்தித்து தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். இதன் பேச்சுவார்த்தை முதற்கட்ட அளவில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.