தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி ரஜினியுடன் ஒரு பிரமாண்டமான கதையை படமாக்க இருந்தார். அதன் பட்ஜெட் காரணமாக ரஜினி அந்த படத்தில் நடிக்கவில்லை.
அதன் பின்னர் அந்த கதையில் பட்ஜெட் குறைத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு ராஜ்கமல் நிறுவனமும் வெளியேற வேறு தயாரிப்பாளர்களுக்கான தேடலில் சிம்பு ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இந்த கதையை நடிகர் அஜித் குமாரை சந்தித்து தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். இதன் பேச்சுவார்த்தை முதற்கட்ட அளவில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.