பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால் முதல் முறையாக 'பரோஸ்' என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கி, நடித்து உள்ளார். 3டி படமாக வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பரோஸ் படம் வெளிவந்த பிறகு மோகன்லால் அளித்த பேட்டி ஒன்றில், "பரோஸ் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை நோக்கி நகர்கிறது. 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு தருகின்ற அன்புக்காகவும், மரியாதைக்காகவும் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். பரோஸ் நான் அவர்களுக்கு தந்த பரிசு. இதை நான் பணத்துக்காக செய்யவில்லை. இப்படத்தை குடும்பம், குழந்தைகளுடன் கண்டுகளிக்க நான் உருவாக்கினேன்" என தெரிவித்துள்ளார்.