பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் ‛பேட்ட, மாறன், மாஸ்டர், தங்கலான்' ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் ' ராஜா சாப்' எனும் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் தெலுங்கில் வெளிவந்த ‛பாகுபலி' படத்தின் பெரிய ரசிகை. இதனால் எனக்கு பிரபாஸ் உடன் இணைந்து நடிக்க வேண்டும் எனும் ஆசை இருந்தது. அந்த சமயத்தில் ‛சலார்' படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பிரசாந்த் நீல் ஏற்படுத்தி தந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் என்னால் சலார் படத்தில் நடிக்க முடியவில்லை. இப்போது ராஜா சாப் படத்தின் மூலம் என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது" என பகிர்ந்துள்ளார்.