சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
விடுதலை படத்திற்கு முன்பே சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க தயாரானார் வெற்றிமாறன். ஆனால் திடீரென்று அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து இயக்கினார். தற்போது விடுதலை-2 படம் திரைக்கு வந்து விட்டதால் அடுத்தபடியாக வாடிவாசல் பட வேலைகளை வெற்றிமாறன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு, மூன்று பாகங்களாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விடுதலை-2 படத்தைப் போலவே இந்த வாடிவாசலும் அரசியல் பேசும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நீண்ட காலம் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தடை நீக்கப்பட்டது.
இதற்குள் எப்படிப்பட்ட அரசியல் எல்லாம் இருந்தது என்பது போன்ற விஷயங்களை இந்த படத்தில் அவர் சொல்லப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வரும் சூர்யா, அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தில் இணைவார் என்கிறார்கள்.