பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

விடுதலை படத்திற்கு முன்பே சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க தயாரானார் வெற்றிமாறன். ஆனால் திடீரென்று அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து இயக்கினார். தற்போது விடுதலை-2 படம் திரைக்கு வந்து விட்டதால் அடுத்தபடியாக வாடிவாசல் பட வேலைகளை வெற்றிமாறன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு, மூன்று பாகங்களாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விடுதலை-2 படத்தைப் போலவே இந்த வாடிவாசலும் அரசியல் பேசும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நீண்ட காலம் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தடை நீக்கப்பட்டது.
இதற்குள் எப்படிப்பட்ட அரசியல் எல்லாம் இருந்தது என்பது போன்ற விஷயங்களை இந்த படத்தில் அவர் சொல்லப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வரும் சூர்யா, அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தில் இணைவார் என்கிறார்கள்.