'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விடுதலை படத்திற்கு முன்பே சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க தயாரானார் வெற்றிமாறன். ஆனால் திடீரென்று அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து இயக்கினார். தற்போது விடுதலை-2 படம் திரைக்கு வந்து விட்டதால் அடுத்தபடியாக வாடிவாசல் பட வேலைகளை வெற்றிமாறன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு, மூன்று பாகங்களாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விடுதலை-2 படத்தைப் போலவே இந்த வாடிவாசலும் அரசியல் பேசும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நீண்ட காலம் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தடை நீக்கப்பட்டது.
இதற்குள் எப்படிப்பட்ட அரசியல் எல்லாம் இருந்தது என்பது போன்ற விஷயங்களை இந்த படத்தில் அவர் சொல்லப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வரும் சூர்யா, அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தில் இணைவார் என்கிறார்கள்.