இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் |
பாலா இயக்கி உள்ள 'வணங்கான்' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். முதலில் இந்த படத்தில் சூர்யா, கிர்த்தி செட்டி, மமிதா பைஜு நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யாவும் கிர்த்தி செட்டியும் விலகி விட்டனர். மமீதா பைஜூ விலக்கப்பட்டார்.
இதுகுறித்து பின்னர் மமிதா கூறும் போது "வணங்கான் படத்தில் இருந்து நான் விலக்கப்படவில்லை நான் தான் விலகினேன். படப்பிடிப்பு தளங்களில் பாலா கடுமையாக நடந்து கொள்கிறார். ஒருமுறை சரியாக நடிக்கவில்லை என்று கூறி முதுகில் அடித்தார். அவருடன் பணியாற்ற முடியாது என்பதால் நானே விலகிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து பாலா இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தார். தற்போது, 'வணங்கான்' படம் குறித்து மீடியாக்களிடம் பேசி வரும் பாலா மமீதாவை அடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். "மமிதா நடிக்க வேண்டிய கேரக்டருக்கு மேக்கப் தேவையில்லை ஆனால் அவர் ஒரு நாள் நிறைய மேக்கப்புடன் படப்பிடிப்புக்கு வந்தார். ஏன் இவ்வளவு மேக்கப் போட்டு வந்திருக்கிறாய் என்று கூறி அடிப்பதுபோல கை ஓங்கினேனே தவிர அடிக்கவில்லை. பின்னர் தான் மேக்கப் உமன் மும்பையைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு படத்தின் கதை, கேரக்டர் குறித்து எதுவும் தெரியாது என்பதும் தெரிய வந்தது. அதற்குப் பிறகு இருவரும் சகஜம் ஆகிவிட்டோம் என்று கூறி இருக்கிறார்.