கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
பாலா இயக்கி உள்ள 'வணங்கான்' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். முதலில் இந்த படத்தில் சூர்யா, கிர்த்தி செட்டி, மமிதா பைஜு நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யாவும் கிர்த்தி செட்டியும் விலகி விட்டனர். மமீதா பைஜூ விலக்கப்பட்டார்.
இதுகுறித்து பின்னர் மமிதா கூறும் போது "வணங்கான் படத்தில் இருந்து நான் விலக்கப்படவில்லை நான் தான் விலகினேன். படப்பிடிப்பு தளங்களில் பாலா கடுமையாக நடந்து கொள்கிறார். ஒருமுறை சரியாக நடிக்கவில்லை என்று கூறி முதுகில் அடித்தார். அவருடன் பணியாற்ற முடியாது என்பதால் நானே விலகிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து பாலா இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தார். தற்போது, 'வணங்கான்' படம் குறித்து மீடியாக்களிடம் பேசி வரும் பாலா மமீதாவை அடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். "மமிதா நடிக்க வேண்டிய கேரக்டருக்கு மேக்கப் தேவையில்லை ஆனால் அவர் ஒரு நாள் நிறைய மேக்கப்புடன் படப்பிடிப்புக்கு வந்தார். ஏன் இவ்வளவு மேக்கப் போட்டு வந்திருக்கிறாய் என்று கூறி அடிப்பதுபோல கை ஓங்கினேனே தவிர அடிக்கவில்லை. பின்னர் தான் மேக்கப் உமன் மும்பையைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு படத்தின் கதை, கேரக்டர் குறித்து எதுவும் தெரியாது என்பதும் தெரிய வந்தது. அதற்குப் பிறகு இருவரும் சகஜம் ஆகிவிட்டோம் என்று கூறி இருக்கிறார்.