நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது இளைய மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக சொத்து விவகாரத்தில் தகராறு நடந்து வருகிறது. கடந்த வாரம் அவரது ஹைதராபாத் வீட்டில் டிவி நிருபர் ஒருவரை கடுமையாகத் தாக்கினார் மோகன்பாபு. அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு உடல்நலம் சரியில்லை என, நீதிமன்றத்தை அணுகி டிசம்பர் 24 வரை அனுமதி வாங்கியுள்ளார் மோகன்பாபு. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்த டிவி நிருபரை சந்தித்துப் பேசியுள்ளார் மோகன்பாபு.
இந்நிலையில் ரச்சகொன்டா போலீஸ் கமிஷனர் சுதீர் பாபு, நடிகர் மோகன்பாபுவுக்கு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 24ம் தேதி வரையில்தான் அவர் அனுமதி கேட்டுள்ளார். நீதிமன்றமும் அதை வழங்கியுள்ளது. அதற்குப் பிறகு அவர் ஒத்துழைக்க மறுத்தால் அவரைக் கைது செய்யவும் தயங்க மாட்டோம். சட்டப்படி அவர் ஒத்துழைக்க வேண்டும். விசாரணைக்கு வரும் போது மருத்துவச் சான்றிதழையும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.