கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'புறநானூறு' படம்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உருவாக உள்ளது.
இப்படத்திற்கு 'புறநானூறு' என்ற தலைப்பு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. அந்தத் தலைப்பை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் பதிவு செய்து வைத்துள்ளதாம். அப்படத்திற்காக அவர்கள் சில பல கோடிகளை செலவு செய்துவிட்டார்களாம். ஆனால், அவை அனைத்தும் வீணாகப் போய்விட்டது. எனவே அந்தத் தலைப்பை அவர்கள் விட்டுத் தர வாய்ப்பில்லை என்கிறார்கள்.
சுதா, சிவகார்த்திகேயன் இணையும் இந்த புதிய படத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. அவர்கள் கேட்டால் சூர்யா தரப்பு மறுக்க முடியாது. மனப்பூர்வமாக விட்டுக் கொடுப்பார்களா அல்லது மறுப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.