விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

நடிகை இந்துமதி மணிகண்டன் தமிழில் கடைக்குட்டி சிங்கம், மெய்யழகன், காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம், டிராகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை நெடுந்தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது இந்துமதி அளித்த பேட்டி ஒன்றில் மெய்யழகன் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில், " மெய்யழகன் படம் மலையாளம், மராத்தி வேறு எந்தவொரு மொழிகளில் உருவாகி இருந்தாலும் படம் எவ்வளவு ஸ்லோவாக இருந்தாலும் அந்த படத்தினை ரசிகர்கள் ஏற்று கொண்டாடி இருப்பார்கள். தமிழில் இந்த மாதிரி படங்கள் வெளியாவதில்லை என ரசிகர்கள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், மெய்யழகன் படம் வெளிவந்த போது ஸ்லோவாக உள்ளது. பேசிக்கிட்டே இருக்காங்க என பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் தமிழில் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டி இருந்தது. ஆனால், மெய்யழகன் படம் ஜெர்மனி நாட்டில் வெளியான போது அங்கு படத்திலிருந்து ஒரு நிமிட காட்சியை கூட குறைக்கவில்லை. அங்கு ரசிகர்கள் அனைவரும் ரசித்து வெற்றி படம் ஆக்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.