'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை | கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் | கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! |
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை திவ்யபாசுரம் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஆண்டாள், ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களுடன் இளையராஜாவும் சென்றதாகவும், ஆனால் இளையராஜாவை மட்டும் வெளியில் நிற்குமாறு கோவில் பட்டர்கள் தெரிவித்து அவமதித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தம் மண்டபத்தில் மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல கோயில் வழக்கப்படி அனுமதி இல்லை. இதுபற்றி இளையராஜாவிடம் திரிதண்டி ஜீயர் தெரிவித்தார். இளையராஜாவும் ஏற்றுக்கொண்டு அர்த்த மண்டபம் முன்பு நின்று தரிசனம் செய்தார் என மதுரை மண்டல அறநிலைத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இளையராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‛‛என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்'' என குறிப்பிட்டுள்ளார்.