கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : விரைவில் வெளியாகுமா? |

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேசமயம் இந்த படம் வெளியான நாளன்று முதல் நாள் ரசிகர் காட்சி பார்க்க வந்த ஹைதராபாத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண் தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்த தியேட்டருக்கு படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தான் இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அவர் இந்த வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைப்பதில் சற்று தாமதமானதால் ஒருநாள் இரவு முழுவதும் அவர் சிறையில் தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மறுநாள் காலை அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பல நட்சத்திரங்களும் சில அரசியல்வாதிகளும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் பின்னர் அவர் விடுதலை குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக இது போன்ற விஷயங்களில் கிண்டலுடன் கருத்துக்களை தெரிவிக்கும் சர்ச்சை புகழ் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த கைது குறித்து கூறும் போது, “ஏற்கனவே புஷ்பா-2 படம் வெற்றி படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படியும் கைது செய்தாலும் உடனே அவர் ஜாமீனில் வரப்போகிறார் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அப்புறம் எதற்காக இந்த கைது என்றால் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது வார கலெக்ஷனும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் நினைத்து விட்டார் போலும். எப்படியோ ஏற்கனவே பிரபலமாக இருந்த அல்லு அர்ஜுனை இந்த கைது நடவடிக்கை மூலம் இன்னும் மெகா பிரபலம் ஆகிவிட்டார். இரண்டாவது வார கலெக்ஷனுக்கும் வசதி செய்து கொடுத்துவிட்டார்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.




