தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
மலையாள திரையுலகில் பிக் பி, அன்வர், வரதன், காம்ரேட் இன் அமெரிக்கா, ஐயூப்பின்டே புத்தகம் உள்ளிட்ட பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் அமல் நீரத். இவரது இயக்கத்தில் சமீபத்தில் போகன் வில்லா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் தலைநகரம், நான் அவன் இல்லை பட புகழ் நடிகை ஜோதிர்மயி நடித்திருந்தார். இந்த படத்திற்காக மொட்டை எல்லாம் அடித்து சில காட்சிகளில் குட்டை தலை முடியுடன் என தனது தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருந்தார் ஜோதிர்மயி. இந்தப் படத்தின் இயக்குனர் அமல் நீரத் இவரது கணவரும் கூட. அது மட்டுமல்ல இந்த படத்தை பஹத் பாசிலும் அமல் நீரத்தும் இணைந்து தான் தயாரித்திருந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவம் குறித்து ஜோதிர்மயி கூறும்போது, “நானும் பஹத் பாசிலும் நடிக்கும் காட்சிகளை படமாக்கிய போது ஒரு முறை சீரியஸ் ஆன காட்சியில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே அடிக்கடி சிரித்து விட்டோம். இதனால் அந்த காட்சியை பலமுறை எடுக்க வேண்டி இருந்தது. இதனால் கோபமான இயக்குனர், என் கணவர் அமல் நீரத் எங்களிடம் வந்து, ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸ் ஆக இருங்கள். நீங்கள் இருவரும் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று சொன்னார். அதன் பிறகு தான் நாங்கள் கொஞ்சம் சீரியஸ் ஆகி அந்த காட்சியில் நடித்து முடித்தோம்” என்று கூறியுள்ளார்.