விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தலைநகரம், நான் அவன் இல்லை படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்தவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. அன்வர், பிலால் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஜோதிர்மயி பல்வேறு பட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தற்போது வெளியாகி உள்ள போகன்வில்லா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியுள்ளது ஜோதிர்மயியின் கணவரான இயக்குனர் அமல் நீரத் தான்.
இந்த படத்தில் இந்த முக்கிய கதாபாத்திரத்திற்காக வேறு எங்கும் ஒரு நடிகையை தேடாமல் தனது மனைவியையே நடிக்க வைக்க முடிவு செய்தாராம் அமல் நீரத். இந்த கதாபாத்திரத்திற்காக மொட்டை அடிக்க வேண்டும் என்றாலும் கூட அதுபற்றி கவலைப்படாமல் ஒப்புக்கொண்ட ஜோதிர்மயிக்கு படப்பிடிப்பில் நடனமாடும் காட்சிகளில் எப்படி சமாளிக்க போகிறோம் என்கிற பயம் வந்து விட்டதாம். நடனமாடி நீண்ட நாட்களாகி விட்டதாலும் சரியான உடற்பயிற்சி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதாலும் நடனம் ஆடுவதில் ஒரு தயக்கம் ஏற்பட்டதாம். அதற்கு பதிலாக எப்படியாவது கீழே விழுந்து காலை முறித்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு கூட எனக்கு யோசனை வந்தது என்று கூறியுள்ளார் ஜோதிர்மயி. இருந்தாலும் நடன இயக்குனர் கொடுத்த பயிற்சி மூலம் ஓரளவு சமாளித்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.