சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
புஷ்பா 2 படத்தின் முதல்காட்சி திரையிடப்பட்ட போது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இது சம்பந்தமாக நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் புஷ்பா-2 படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛இப்போது நடப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. புஷ்பா-2 படத்தின் முதல் காட்சியின்போது ஒரு பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. அது மிகவும் வருத்தமானதும் கூட. ஆனபோதிலும் அல்லு அர்ஜுன் என்ற ஒருவர் மீது எல்லா பழியையும் சுமத்துவது வருத்தமளிக்கிறது'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நானி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சினிமா துறையினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்கள் மீதும் காட்ட வேண்டும். நடந்து முடிந்தது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். ஆனால் இதற்கு எல்லாம் ஒரே ஒரு மனிதர் மட்டும் பொறுப்பேற்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.